நாள் - ஆகஸ்ட் 6, 2017, ஞாயிற்றுக்கிழமை
இடம் - விமலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமாபுரம்
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள பொதுமக்கள், தங்கள் சேமிப்பு சம்பாத்தியத்தில் பெரும்பகுதி போனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில், குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். கல்வி கட்டணத்தை கட்டி முடிப்பதற்குள் அவர்கள் படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களின் சுமையில் கொஞ்சத்தை ஏற்க அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது யானைப்பசிக்கு சோளப்பொறிதான் என்றாலும், அதைப் பற்றி மக்களுக்கு தெரியாமல் உள்ளது. அதுவும் ஆன்லைன் முறையில் ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்கும் உத்தரவு வந்த பின்பு, பலரும் அதை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இத்தகையவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, நாம் ஸ்காலர்ஷிப் கேம்ப் அமைத்து, 126 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்து கொடுத்தோம். இதில், 82 பேர் கிறிஸ்தவ மாணவர்கள். முகாம் நடத்துவது என்றால், அதில் விண்ணப்பிக்க கணினிகள் தேவை, விண்ணப்பிக்கும் பயிற்சி உள்ள ஆட்கள் தேவை, முழு நாள் அர்பணிப்பு தேவை என்ற நிலையில், அல்லாஹ் அதற்குரிய வழிகளை லேசாக்கி, நினையாப்புறத்திலிருந்து உதவிகளை செய்தான். இனிதே ஸ்காலர்ஷிப் கேம்ப் முடிவடைந்தது. விமலா கான்வென்ட் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பை கண்டிப்பாக குறிப்பிட்டு பாராட்டி ஆக வேண்டும். மதிய உணவு, வை ஃபை வசதி, கணினி வசதி என்று சகலத்தையும் செய்து கொடுத்தார்கள்.






Comments
Post a Comment